தனது தந்தையின் கடைசி நாட்களில் கூட அவரது அருகில் இருந்து கவனித்துக் கொள்ள முடியவில்லை என பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா உருக்கமாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், தனது திரை பயணத்தில், பிறந்தநாளையும் பண்டிகைகளையும் கூட கொண்டாட முடியவில்லை எனவும், குடும்பத்தினருடன் மிகக் குறைவான நேரங்களையே கழித்தேன் என்றும் கூறினார். மேலும் தனது தந்தை மருத்துவமனையில் இருந்தபோதும் அவரை கவனிக்க முடியாத சூழ்நிலை இருந்ததாக தெரிவித்தார்.