Also Watch
Read this
மெட்ரோ ரயில் இரும்பு தடுப்புகள் மீது மோதிய அரசுப் பேருந்து.. பேருந்தை ஓட்டுநர் மதுபோதையில் இயக்கியதால் விபத்து
மதுபோதையில் விபத்து
Updated: Sep 17, 2024 12:05 PM
சென்னை ஓஎம்ஆர் சாலையில் மது போதையில் அரசு பேருந்தை இயக்கி விபத்து ஏற்படுத்தியதாக ஓட்டுநரை, மற்ற வாகன ஓட்டிகள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொட்டிவாக்கம் ஒய்எம்சிஏ பள்ளி அருகே அரசு பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து மெட்ரோ ரயில் இரும்பு தடுப்புகள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் ஆவேசமடைந்த மற்ற வாகன ஓட்டிகள் அரசு பேருந்தை வழிமறித்து, ஓட்டுநர் சரவணனிடம் முறையிட்ட போது அவர், மதுபோதையில் இருந்ததால் அவரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.
இதையடுத்து சம்பவ இடம் விரைந்த போலீசார் ஓட்டுநர் சரவணனை மீட்டு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
About Us
Newsletters
Terms of Use
Privacy Policy
© Copyright Newstamil 2024. All rights reserved
Hand-crafted & made with - Datasense Technologies