சென்னையிலிருந்து கோவை சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்து தடுப்புகள் மீது மோதி சாலையில் கவிழ்ந்ததில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் உள்ளூர் மக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சாலையில் கவிழ்ந்த பேருந்தை பொக்லைன் மூலம் அப்புறப்படுத்தி விசாரணை மேற்கொண்டதில், 4 மணி நேரம் காலதாமதமானதால், ஓட்டுநர் பேருந்தை அதிவேகமாக இயக்கியதே விபத்துக்கு காரணம் என தெரியவந்தது.