நாமக்கலில் அரசு உத்தரவை மீறி, அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்திய தனியார் பள்ளி நிர்வாகம், மாவட்ட அலுவலர் உத்தரவின் பேரில் மாணவர்களை வெளியேற்றியது. பள்ளிபாளையம் அடுத்த சின்னார்பாளையம் பகுதியில் இயங்கி வரும் வள்ளியப்பா வித்தியாலயம் மேல்நிலைப் பள்ளியில், அரையாண்டு விடுமுறையில் கூட தொடர்ந்து சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக, தனியார் பள்ளி மாவட்ட அலுவலருக்கு புகார் வந்தது. இதையடுத்து மாணவர்களை வெளியேற்ற உத்தரவிட்ட மாவட்ட அலுவலர், இனி வரும் காலங்களில் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.