Also Watch
Read this
By: Web Team

மயிலாடுதுறை அருகே அங்காடியின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்ததில் ரேஷன் கடை தற்காலிக எடையாளர் பலத்த காயமடைந்தார். கிடாரங்கொண்டான் ஊராட்சி பொன்செய் கிராமத்தில் உள்ள அங்காடியில் விற்பனையாளர் சித்ராவுக்கு உதவியாக தற்காலிகமாக பணிபுரிந்து வரும் எடையாளர் சௌரிராஜன், பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, மேற்கூரையின் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த அவர், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.