Also Watch
Read this
By: Web Team

கோவையில், இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பதைபதைக்க வைத்த நிலையில், பெண்களுக்கு பெப்பர் ஸ்ப்ரே வழங்கி அதிமுகவினர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் நிர்வாகிகள் இணைந்து, சுந்திராபுரம் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பெண்களுக்கும், பேருந்து பயணிகளுக்கு ஸ்ப்ரேவை வழங்கி எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்பதையும் கற்று தந்தனர்.
இதே போல், ஈச்சனாரி அருகே செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவிகளுக்கும் அதிமுகவினர் விலையில்லா பெப்பர் ஸ்ப்ரேவை வழங்கினர்.