தமிழக மீனவர்களை தாக்கி 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான எஞ்சின், ஜிபிஎஸ் கருவி, 2 செல்போன்கள், 30 கிலோ மீன்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் புதுப்பேட்டையை சேர்ந்த கவிதாஸ் என்பவருக்கு சொந்தமான ஃபைபர் படகில் செந்தில், சாமுவேல், ராமகிருஷ்ணன், ஜெகன் ஆகியோர் கடந்த 15ஆம் தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினர். இந்திய எல்லைக்குள் வந்த அவர்களின் படகை மடக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கிவிட்டு பொருட்களை கொள்ளையடித்தனர். இதில் காயமடைந்த மீனவர்கள் வேதாரண்யம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.