சென்னை தலைமைச் செயலகத்தில், செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், எஸ்ஐஆர் பணிகள் குறித்து விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது;தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்களில் 6.16 கோடி வாக்காளர்களுக்கு SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் 50% வரை திரும்பப் பெறப்பட்டுள்ளன. எந்த விசாரணையும் இன்றி, வாக்காளர் பட்டியலில் இருந்து யாரையும் நீக்க முடியாது.68,647 BLOக்கள் உள்ளிட்ட 2.45 லட்சம் நபர்கள் SIR பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகப்படியான BLOக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.SIR பணிகளில் தேர்தல் ஆணையம் சார்பில் 83 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.சென்னையில் 96 சதவீதம் அளவுக்கு SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 2 லட்சம் விண்ணப்பங்கள் ஆன்-லைன் வாயிலாகப் பெறப்பட்டுள்ளன.SIR படிவங்களை பூர்த்தி செய்து அளிப்பதற்கான காலக்கெடு டிச.4ஆம் தேதி, அதனை நீட்டிக்க வாய்ப்பில்லை.இவ்வாறு அர்ச்சனா பட்நாயக் கூறினார்.