திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் உள்ள முருகன் கோயிலில், செவ்வாய்க்கிழமை மற்றும் தை அமாவாசையையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருவள்ளூவர் மாவட்டம் மட்டுமல்லாமல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்கில் இருந்த வருகை தந்த ஏராளமான பக்தர்கள், சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து பாலசுப்பிரமணிய சுவாமியை தரிசித்தனர். இதனை தொடர்ந்து, கோயிலின் பின்புறத்தில் உள்ள வேப்பமரத்திற்கு ஆடியில் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் விதமாக நெய்தீபம் ஏற்றி திரளான பக்தர்கள் வழிபட்டனர்.