திருடப்படும் மின்சாரம் : திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கடம்பை கிராமத்தில் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி மின் இணைப்பு பெறாத பயணியர் நியற்குடையை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி திறந்து வைத்த பயணிகள் நிழற்குடைக்கு சட்ட விரோதமாக மின்சாரம் திருடப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடம்பை கிராமத்தில் ரூபாய் 6 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பயணிகள் நிழற் குடையை கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிலையில் இந்த பயணிகள் நிழற்குடைக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் முறையாக மின்சாரம் பெறாமல் சட்டவிரோதமாக மின் கம்பிகளில் இருந்து கொக்கிகள் போட்டு மின்சாரத் திருடி பயன்படுத்தி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து மின்சாரத் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முறையான மின்சாரம் பயணியர் நிழற்குடைக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். Related Link பள்ளி மாணவர்களை அரசு பேருந்தை தள்ள வைத்த காட்சி