Also Watch
Read this
Posted on: Jan 21, 2026 11:55 AM
By: Manigandan Raja

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ அலுவலகத்தில் 5 ஆம்புலன்ஸ்களின் ஓட்டுநர்கள் விசாரணைக்கு ஆஜராகினர். துயர சம்பவத்தன்று காந்தி கிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டிய ஐந்து பேர் தாந்தோன்றிமலை பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் விசாரணைக்கு ஆஜராகினர்.
ஓட்டுநர்களிடம் ஆம்புலன்ஸ் எங்கிருந்து வரவழைக்கப்பட்டது, யார் சொல்லி வந்தது, ஆம்புலன்ஸ்க்கு யார் பணம் கொடுத்தது உள்ளிட்ட கேள்விகளை அதிகாரிகள் கேட்டதாக தகவல் வெளியாகியது.
இதையும் படியுங்கள் : பரபரப்புக்கு மத்தியில் Silent-ஆக விஜய் எடுத்த அடுத்த மூவ்!
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved