நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மீன்பிடி படகுகளில் நடுக்கடலுக்குச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் அங்கு கேக் வெட்டி உற்சாகமாகக் கொண்டாடினர். நெல்லை கிழக்கு மாவட்ட திமுக வர்த்தக அணி அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் ஏற்பாட்டில் 5 நாட்டுப் படகுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது குழந்தைகளுடன் நடுக்கடலுக்குப் பயணம் செய்தனர் பின்னர் நடுக்கடலில் படகிலேயே கேக் வெட்டி ஒருவருக்கொருவர் மகளிர் தின வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.நடுக்கடலில் கேக் வெட்டி கொண்டாட்டம்வித்தியாசமான முறையில் மகளிர் தினத்தை பெண்கள் தைரியமாக நடு கடலுக்குச் சென்று மகளிர் தினத்தை கொண்டாடியது அங்கிருந்த பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது. பின்னர் கரை திரும்பிய பெண்கள் கேக்குகளை முகத்தில் பூசி விளையாடி மகிழ்ந்தனர். ஏ.ஆர். ரகுமான் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் கலந்து கொண்டனர். Related Link என் புள்ளய அடிச்சே கொன்னுடாங்க...