தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்கம் சார்பில் தங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் நான்காம் நிலை ஊழியர்களுக்கு இணையான டி பிரிவு ஊதியம் வழங்க வேண்டும் காலி பணியிடம் நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையில் ஆன பணி வழங்க வேண்டும் அரசாணை 33 திருத்தம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் பணிகளை புறக்கணித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பணிபுரியக்கூடிய 70-க்கும் மேற்பட்ட ஆண் பெண் கிராம உதவியாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம உதவியாளர் சங்க மாநிலச் செயலாளர் தங்கபாண்டியன் தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம உதவியாளர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர் கிராம உதவியாளர்கள் போராட்டம் காரணமாக வருவாய் துறை பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. Related Link குடியிருப்பு பகுதியில் உலா வந்த இரண்டு சிறுத்தைகள்