Also Watch
Read this
By: Web Team

திருவாரூர் மாவட்டம் பாண்டுகுடியில் காதல் பிரச்சினையில் நீதிமன்ற ஊழியர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
பாண்டுகுடியைச் சேர்ந்த ஆதம், சௌமியா என்பவரை காதலித்து வந்த நிலையில் சௌமியா அவருடன் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து கேட்க தனது நண்பர்களை அழைத்து கொண்டு சௌமியாவின் வீட்டிற்கு ஆதம் சென்றபோது சௌமியாவின் சகோதரருக்கும் ஆதம் தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இதனை அப்பகுதியை சேர்நத நீதிமன்ற ஊழியரும் அவரது நண்பரும் தடுத்தபோது ஆதம் அவரை கத்தியால் குத்தி கொலை செய்தார்.
மற்றொருவர் காயமடைந்த நிலையில், ஆதமின் நண்பர்களை கைது செய்த போலீசார் ஆதமை தேடி வருகின்றனர்.