தொடர் கனமழை காரணமாக, குற்றால அருவிகளில் குறையாத வெள்ளப்பெருக்கு.பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க நான்காவது நாளாக தடை தொடர்கிறது. தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் குளிக்க நான்காவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.