ஈரோட்டில் இருசக்கர வாகனத்தில் குழந்தையை ஆபத்தான முறையில் நிற்க வைத்தபடி தாய் அழைத்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சமீபத்தில் இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாவது அதிகரித்து வரும் நிலையில், ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட வ.உ.சி பூங்கா சாலையில் பெண் ஒருவர் தனது குழந்தையை பைக்கின் பின் இருக்கையில் நிற்க வைத்தபடி அழைத்து சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், பெற்றோர் கவனகுறைவாக செயல்படுவதால் தான் விபத்துகள் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.