Also Watch
Read this
By: Manigandan Raja

பெண் குழந்தைகளுக்கு சிறந்த கல்வி, பாதுகாப்பை உறுதி செய்வோம் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பெண் குழந்தைகள் கண்ணியம் மற்றும் நம்பிக்கையுடன் கூடிய வாழ்க்கையை வாழ்வதை அரசு உறுதி செய்யும் எனவும் பிரதமர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக, பெண் குழந்தைகளுக்கான சிறந்த கல்வி, திறன் மேம்பாடு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்தி வருவதாகவும், இது வளர்ந்த இந்தியாவை நோக்கிய பயணத்தை உறுதி செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.