டெலிவரி நபரை ஆச்சரியப்படுத்திய நபர் : பெங்களூருவில் ஹோலி பண்டிகையின் போது, டெலிவரி செய்ய சென்ற நபருக்கு, வத்ஸல் ஸ்ரீவஸ்தவா என்ற நபர் வண்ணப் பொடியை பூசி, இனிப்புகள் மற்றும் தின்பண்டங்களை வழங்கி ஆச்சரியப்படுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஹோலி அன்று ஆர்டர் செய்த பொருட்களை வழங்க சென்ற டெலிவரி நபருக்கு, வத்ஸல் கதவைத் திறந்து, "ஹேப்பி ஹோலி" என்று கூறி, வண்ணப் பொடியை பூசி, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார். அவரது அன்பான இந்த செயல் பண்டிகை காலங்களில் டெலிவரி செய்யும் தொழிலாளர்களின் உழைப்பை பாராட்டும் வகையில் அமைந்து, பலரின் இதயங்களை வென்றுள்ளது. Related Link ரிதாலா குடிசைப் பகுதியில் ஏற்பட்ட பெரும் தீவிபத்து