மக்களவையில் இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள அரசியலமைப்பு குறித்த விவாதத்தின் மீது பிரதமர் மோடி வரும் சனிக்கிழமை பதிலளித்து பேச உள்ளார். அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு 75 ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து மக்களவையில் 13,14 ஆகிய தேதிகளிலும், மாநிலங்களவையில் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளிலும் விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மக்களவையில் வரும் 14ஆம் தேதியும், மாநிலங்களவையில் வரும் 17ஆம் தேதியும் அரசியலமைப்பு குறித்த விவாதத்தின் மீது பிரதமர் மோடி பதிலளித்து பேசுகிறார்.