திருப்பதி ஏழுமலையான் கோயிலில், நடிகை அஞ்சலி சாமி தரிசனம் செய்தார். விஐபி பிரேக் தரிசனத்தின் மூலம், சாமி தரிசனம் செய்த அவருக்கு, ரங்கநாயக மண்டபத்தில் வேத பண்டிதர்கள் ஆசி வழங்க, தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கி மரியாதை செய்தனர். அதனைத் தொடர்ந்து, ஆலயத்தை விட்டு வெளியே வந்த நடிகை அஞ்சலியுடன் பக்தர்கள் மற்றும் ரசிகர்கள் போட்டி போட்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.