டெல்லியின் Shantivan பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் சென்ற கார் தடுப்பு கம்பியில் மோதி விபத்துக்குள்ளானது. பல்கலைக்கழக மாணவர்கள் 4 பேர் பிறந்தநாளை கொண்டாட்டத்திற்கு காரில் சென்றுவிட்டு குருகிராமிலிருந்து திரும்பினர். அப்போது காரை ஓட்டி வந்தவர் தனது செல்போனில் பாடலை மாற்ற முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து தடுப்பில் மோதியது. இதில் மாணவர்கள் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.