Also Watch
Read this
By: Manigandan Raja
ஒரே நாளில், ஒரு சவரனுக்கு 3 ஆயிரத்து 600 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 900 ரூபாயாக உள்ளது.
ஒரே நாளில் 2 முறை விலையேற்றம்
இன்று காலை, ஒரு சவரனுக்கு ரூ.1280 ஆக அதிகரித்த நிலையில் தற்போது ரூ.2,320 என உயர்ந்து, ஒரே நாளில் ரூ.3,600 ஆக, தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, தங்கம், வெள்ளியில், அதிக முதலீடு செய்கின்றனர். சர்வதேச சந்தையில், தங்கம், வெள்ளி விலை உயர்ந்துள்ளதால், நம் நாட்டில் புதிய உச்சத்தை எட்டி வருகின்றன.
கடந்த வாரத்தில் விலை நிலவரம்
தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம் 13,280 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,06,240 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. வெள்ளி ஒரு கிராம் 310 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஞாயிற்றுக் கிழமை விலையில் மாற்றமின்றி, முதல்நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனை ஆனது. நேற்று ஜனவரி-19ஆம் தேதி ஒரு கிராமுக்கு 170 ரூபாய் உயர்ந்து, 13,450 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு சவரனுக்கு, 1,360 ரூபாய் அதிகரித்து, 1,07,600 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு, எட்டு ரூபாய் உயர்ந்து, 318 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கிலோவுக்கு, 8,000 ரூபாய் அதிகரித்து, 3.18 லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.
இன்றைய காலை தங்கம், வெள்ளி விலை நிலவரம்
இந்த நிலையில், இன்று ஜனவரி 20ஆம் தேதி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 160 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் 13 ஆயிரத்து 610 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இதேபோல வெள்ளி விலையும் இன்று புதிய உச்சத்தை எட்டியது. வெள்ளி விலை கிராமுக்கு 12 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 330 ரூபாய்க்கும், கிலோவுக்கு 12 ஆயிரம் ரூபாய் அதிகரித்து, ஒரு கிலோ 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.
புதிய உச்சத்தை எட்டியது தங்கம் விலை
மாலை நிலவரப்படி, ஒரே நாளில் சவரனுக்கு 3 ஆயிரத்து 600 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved