கோலிவுட்டின் டாப் நடிகர்களான ரஜினி, கமலை வைத்து திரைப்படம் இயக்க மாட்டேன் என இயக்குனர் பாலா தெரிவித்துள்ளது திரைப்பட ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 'வணங்கான்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவக்குமார், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் தங்களிடம் வந்தால் படம் இயக்குவீர்களா என பாலாவிடம் கேட்டார். அதற்கு பாலா, வாய்ப்பு இல்லை என்றும், அவர்கள் பாதை வேறு, தன் பாதை வேறு என்றார்.