அரசுப்பள்ளிகளில் உள்கட்டமைப்புகளை மெற்கொள்ள ரூ.1000 கோடி ஒதுக்கீடு, ரூ.50 கோடியில் 500 அரசுப்பள்ளிகளில் உயர்கல்வி குறித்து விழிப்புணர்வு பயிற்சிசுமார் 3 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்காக ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு.ரூ.65 கோடியில் 2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் தரம் உயர்த்தப்படும், ரூ.56 கோடியில் 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும்,ரூ.160 கோடியில் 2,000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும்.5 ஆண்டுகளுக்குள் உலக தரவரிசையில் அண்ணா பல்கலைக்கழகத்தை முன்னிலைப்படுத்தவும், ஆசியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனமாக மாற்றவும் நடவடிக்கைஅரசுப்பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி ரூ.700 கோடியாக உயர்த்தப்படும்.அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் மேலும் 15,000 இடங்கள் அமைக்கப்படும், வளர்ந்து வரும் துறைகளில் புதிய பட்டப்படிப்புகள் உருவாக்கப்படும்குன்னூர்,நத்தம் உள்ளிட்ட பகுதிகள் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் ,அரசு பொறியியல் கல்லூரிகளில் ஏஐ உள்ளிட்ட நவீன தகவல் தொழில்நுட்பப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும்.