தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற மத்திய அரசுக்கு உத்தரவிட கோரிய வழக்கு, தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.தமிழ்நாட்டின் பண்பாட்டை தொடர்ந்து விமர்சித்து தமிழக மக்களை இழிவு படுத்தி வருவதால், அவரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என குறிப்பிட்டு வழக்கறிஞர் ஜெய்சுகின் வழக்கு தொடர்ந்தார்.