இலங்கை அதிபர் உடனான சந்திப்பின் போது, தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தகவல் தெரிவித்துள்ளார். அடுத்தவாரம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் அனுர குமார திசநாயகேவை சந்தித்து பேசவிருக்கிறார்.