நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி, உண்மையான கூட்டாட்சியை நிலை நிறுத்தவும், மாநில உரிமைகளை பெறவும், போராட தேவையான அனைத்தையும் செய்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய அரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியா ஒரே ஒரு கலாச்சாரம் அல்லது ஒரே ஒரு சித்தாந்தத்திற்கு சொந்தமானது அல்ல, நாட்டின் அனைத்து மக்களுக்கும் சொந்தமானது என கூறியுள்ளார். அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையை சுருக்க முயற்சிக்கும் ஒவ்வொரு சக்தியையும் எதிர்க்கும் நமது உறுதியை மீண்டும் உறுதிபடுத்துவதாக முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.