திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடிகர் யோகி பாபு சுவாமி தரிசனம் செய்தார். சண்முகர், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட சுவாமி சன்னிதிகளில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகத்தினர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். பின்னர் வெளியே வந்த அவருடன் பக்தர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.