ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மிச்செல் ஜான்சன் இந்தியாவின் லக்னோவில் உள்ள ஓட்டல் அறையில் பாம்பைக் கண்டதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
லெஜண்ட்ஸ் லீக் போட்டிக்காக இந்தியாவின் லக்னோவில் தங்கியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மிச்செல் ஜான்சன்.
அவர் தனது ஓட்டல் அறையில் பாம்பு வந்திருப்பதை புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அது என்ன வகைப் பாம்பு என்றும் வினவியுள்ளார்.