சென்னையில் நகைக்கடை ஒன்றில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள செங்கோலின் மாதிரியை ஏராளமானோர் பார்த்துச் சென்றனர். வரும் 28 ஆம் தேதி புதிய நாடாளுமன்றம் திறப்பு விழாவில், பிரதமர் மோடியிடம் செங்கோலானது வழங்கப்படவுள்ளது. தற்போது அந்த செங்கோல் அலாகாபாத் மியுசியத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 28ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்படவுள்ளது. இந்நிலையில் அந்த செங்கோலின் மாதிரி உமிடி பங்காரு நகைக் கடையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பலரும் அதனை ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.