இந்தியாவில் கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதித்த, தொழில் போட்டிகளை ஒழுங்குபடுத்தும் ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்த்து, நீதிமன்றத்தில் Alphabet நிறுவனம் வழக்கு தொடர உள்ளது.
பிளே ஸ்டோரில் செயலி உருவாக்கிய நிறுவனங்களிடம் தமது மேலாதிக்கத்தை தவறாக பயன்படுத்தியது, ஆண்ட்ராய்டு செல்போனில் துஷ்பிரயோகம் செய்தது என 2 புகார்களில், கூகுள் நிறுவனத்திற்கு 2 ஆயிரத்து 264 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தனது நடத்தைகளை மாற்றியமைக்குமாறு, இந்திய தொழில் போட்டி ஆணையம் அறிவுறுத்தி இருந்தது.