Also Watch
Read this
By: Manigandan Raja

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் :
புதுக்கோட்டை மாவட்டம் புதுப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் முகமது ஒலி, இவர் மீமிசல் பகுதியில் உள்ள பிரபல இருசக்கர வாகன ஷோரூமில் யமகா பைக் ஒன்று வாங்கியுள்ளார்.
ஸ்ரீராம் ஃபைனான்ஸ் மூலம் கடந்த 2022ம் ஆண்டு இருசக்கரம் வாங்கிய முகமது முறையாக மாதத்தவணை கட்டவில்லை என கூறப்படுகிறது. இதனை அடுத்து ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனம் சார்பில் வண்டியை தூக்கிச் சென்றுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த முகமது ஒலி தான் இருசக்கரம் வாங்கிய ஷோ ரூமுக்கு சென்று உருட்டு கம்பியால் கடைக்கண்ணாடி மற்றும் விற்பனைக்காக வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளார்.
இதன் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved