காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணி சுவாமி கோவிலில், வள்ளி, தெய்வானை சமேதராக வெள்ளித் தேரில் எழுந்தருளிய முருகப் பெருமானை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கார்த்திகை மாத கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு, முருகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, கிரீடம் தரித்து பச்சை பட்டாடை உடுத்தி, மலர்களால் அலங்கரித்து மகா தீபதூப ஆராதனைகள் நடைபெற்றது.