Also Watch
Read this
By: Manigandan Raja

கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் :
கடலூர் மாவட்டம் வடலூர் அடுத்த தென்குத்து,புதுநகர், ,வானதிராயபுரம் உள்ளிட்ட கிராம பகுதியில் NLC நிறுவனம் சுரங்கம் 1a விரிவாக்கத்துக்காக காவல்துறையை வைத்து நிலத்தை என்எல்சி நிறுவனம் கைகப்படுத்த முயற்சி செய்கிறது.
உயர் இழப்பீடு, வீட்டுக்கு ஒருவருக்கு மாற்று மனை உள்ளிட்டவர்களை வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் என்எல்சி நிறுவனம் நிலத்தை வழங்க கிராம மக்கள் மறுப்பு தெரிவித்தனர் சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தானபுரத்தில் பேருந்து நிறுத்தம் பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக சாலை மறியல் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் வடலூர் காவல் துறையினர் டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் தலைமையில் பொதுமக்களை வலு கட்டாயமாக தரதர என இழுத்து காவல்துறை வாகனத்தில் ஏற்றி சென்றனர் இதனால் காவல்துறைக்கும் பொது மக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.. இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அழைத்து சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved