பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு காணொளி வீடியோவில் பகீர் கிளப்பிய பொதுமக்கள் சைலேன்ட் மூடில் கப்சீப் ஆக இருந்த சென்னை மேயர் , காவல் ஆணையர் வீடியோவை கட் செய்வதா வேண்டாமா என யோசனை நிலைக்கு தள்ளப்பட்ட விபரீதம்
பாலினம் மற்றும் கொள்கை ஆய்வாகத்தின் சார்பில் இன்று சென்னை ரிப்பன் பில்டிங்கில் உள்ள அம்மா மாளிகை அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை மேயர் பிரியா கலந்து கொண்டு பாலினம் கொள்கை ஆகியவற்றின் சின்னம் வெளியிட்டார்
இந்த நிகழ்ச்சியில் சென்னை காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் , மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் , துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்
சென்னை மேயர் பிரியா மேடை பேச்சு
பெண்கள் பாதுகாப்பு எந்த அளவுக்கு முக்கியம் என்பது தான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம் ஆசிரியர்களுக்கும் பள்ளியில் எப்படி நடக்க வேண்டும் என பயிற்சி எடுத்து உள்ளோம் சில ஆசிரியர்கள் பெண் பிள்ளைகள் , ஆண்கள் சரியாக பழக வைக்க அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம் இருக்கிற மாநகராட்சியிலேயே சென்னை மாநகராட்சி பாதுகாப்பாக உள்ளது என தெரிவித்தார்.
இதன் பின்னார் நிகழ்ச்சியில் பொதுமக்கள் கருத்து அறியும் வண்ணம் பெரிய எல்இடி திரை வைக்கப்பட்டு இருந்தது அப்போது
விழிப்புணர்வு காணொளி காட்சி வீடியோவில் பகீர் கிளப்பிய பொதுமக்கள் சைலேன் மூடில் கப்சீப் ஆக இருந்த மேயர் , காவல் ஆணையர் வீடியோவை கட் செய்வதா வேண்டாமா என யோசனை
வீடியோவில் பொதுமக்கள் பேசிய பேச்சு இவைகள் ( சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதில் )
பேருந்துக்காக வெகு நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது ஃப்ரீ சொன்னாதால் உடனே பேருந்து வருவது இல்லை
கை போட்டால் கூட பஸ் நிறுத்துவது இல்லை பஸ் ஸ்டாபீங்கில் கூட நிறுத்துவது இல்லை
மற்ற இடங்களை விட சென்னை பாதுகாப்பு
பெண்கள் வேலைக்கு போகும் போது செயின் அறுக்கிறது , செல்போன் பறிக்கின்றது என நடக்கின்றது
பாதுகாப்பு என்பதே கிடையாது கல்யாணம் ஆன பெண்களையும் பார்கின்றார்கள் , சின்ன குழந்தை என்று கூட விட மாட்டீங்கீறார்கள்
பாதுகாப்பே எந்த இடத்திலும் கிடையாது
பஸ்சில் போனா கூட நடக்கும்
எனக்கே அடந்து இருக்கு நம்ப அப்பா வயதில் இருப்பவர்கள்
வயதானவர்கள் ரொம்ப அட்டகாசாம் பஸ்சில் கண்டக்டர் செய்யுறது ரொம்ப ஓவர் சீண்டுரது எல்லாம் நடக்குது
ஒரு பெண்னோட விருப்பம் இல்லாமல் தொடுவது தவறு அது அவருடை கணவராக இருந்தாலும்
விழிப்புணர்வு காணொளி காட்சி வீடியோவில் பகீர் கிளப்பிய பொதுமக்கள் சைலேன் மூடில் கப்சீப் ஆக இருந்த மேயர் , காவல் ஆணையர் வீடியோவை கட் செய்வதா வேண்டாமா என யோசனை செய்யும் போதே வீடியோ அனைத்து முடிந்தது
![சென்னை மாநகராட்சி மிகவும் பாதுகாப்பானது மாநகராட்சி மேயர் பிரியா பெருமிதம்](https://newstamil.tv/admin/images/news/newstamil_6324411699605736.webp)
00 Comments
Leave a comment