சினிமாவிற்கு புதிதாக வரும் இளைஞர்கள் பராசக்தி திரைப்படத்தை 100 முறையாவது பார்க்க வேண்டுமென இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். அம்பத்தூரில் விழா ஒன்றில் பேசிய அவர், தாம் பல புத்தகங்கள் படித்துள்ளதாகவும், ஒவ்வொரு புதிய திரைப்படத்தின் போதும் தனக்கு திரைக்கதை எழுதுவது கடினமாக உள்ளதாகவும், ஆனால் அந்த காலத்தில் அவ்வளவு ஆழமான திரைக்கதையை கலைஞர் எழுதியுள்ளார் என்றும் பாராட்டு தெரிவித்தார்.
சினிமா
00 Comments
Leave a comment