இரண்டாம் நிலை காவலர் தேர்வு மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் மொத்தம் 3,359 காலி பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும் என்றும் அதற்கான இணைய வழி விண்ணப்பங்கள் வரும் 18-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 17-ஆம் தேதி வரை சமர்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறைந்த பட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்களும் , 18 வயதிலிருந்து 26 வயதுடையோர் வரையிலும் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
00 Comments
Leave a comment