விஜயலட்சுமி, வீரலட்சுமி, முக்தார், யூடியூப் சேனல்கள் என தன்னைப்பற்றி அவதூறாக பேசிய அனைவர் மீது வழக்கு தொடுக்க இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை ஆவடியை அடுத்த பட்பாபிராமில் நாதக நிர்வாகியின் திருமண விழாவில் பங்கேற்ற சீமான், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, விஜயலட்சுமி யோசித்து விட்டு பேசியிருக்க வேண்டும் எனவும், ஏழு முறை கருவை கலைத்தேன், மாத்திரை வைத்தேன் என கூறியதற்கு எல்லாம் ஆதாரம் காட்ட வேண்டும் எனவும் கூறினார்.
தமிழ்நாடு
00 Comments
Leave a comment