திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அறிய வகையான மருத்துவ குணம் கொண்ட ஆப்பிரிக்க துலிப் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வரும் நிலையில், இந்த வகையான மரங்களை அதிகளவு மலைப்பகுதியில் நட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இம்மரத்தின் பட்டை, பூ, இலை பல்வேறு சிகிச்சைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

00 Comments
Leave a comment