உலக வல்லரசுகள் அமெரிக்கா, சீனாவால் முடியாத நிலவின் தென்துருவத்தை தன்வசமாக்கியுள்ளது இந்தியா. ஆனால் நிலவில் எதற்காக லேண்டரையும், ரோவரையும் இந்தியா களம் இறக்கியுள்ளது. அதனால் என்ன பயன்?
நிலவின் தென்துருவத்தில் லேண்டர் விக்ரம் தரையிறங்கிய சில மணி நேரங்களுக்கு பிறகு அதில் இருந்த ஒரு பக்க கதவு போன்ற அமைப்பு திறந்தது. இதனை அடுத்து உள்ளே இருந்த பிரக்யான் ரோவர் வெளியே வந்து நிலவில் தடம் பதித்தது. தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகளின் கட்டளைகளை ஏற்று நிலவில் ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது பிரக்யான் ரோவர்.
ராக்கெட் மூலம் சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணுக்கு கொண்டு சென்றது, ராக்கெட்டில் இருந்து சந்திரயான் விண்கலம் பிரிந்தது, விண்கலத்தில் இருந்து லேண்டர் பிரிந்தது பிறகு லேண்டர் நிலவில் தரையிறங்கியது என அனைத்தும் திட்டமிட்டபடி நிகழ்ந்தது. இந்த அனைத்து நிகழ்வுகளின் உச்சமாக லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்தது கருதப்படுகிறது. ஏனென்றால் இந்த ரோவர் தான் நிலவை ஆராய உள்ளது.
பிரக்யான் ரோவர் கருவியில் LASER Induced Breakdown Spectroscope மற்றும் Alpha Particle X-Ray Spectrometer என இரண்டு கருவிகள் உள்ளன. நிலவின் தரைப்பகுதியை குடைந்து அங்கு இருந்து மண்ணை எடுத்து ஆய்வு செய்வது தான் ரோவருக்கு இஸ்ரோ கொடுத்துள்ள அசைன்மென்ட்.
பிரக்யான் ரோவர் மூலம் நிலவின் மண்ணில் இரும்பு, அலுமினியம், மெக்னீசியம், சிலிக்கான், டைட்டானியம் போன்ற தனிமங்கள் உள்ளனவா? நிலவின் மேற்பரப்பில் உள்ள வேதிப்பொருள்கள் என்ன தன்மையில் உள்ளன என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
நிலவின் மண்ணை ஆய்வு செய்வதன் மூலம் நிலவில் ஹைட்ரஜன், ஆக்சிஜன் போன்றவற்றின் இருப்பு குறித்து தெரிந்து கொள்ள இயலும். இந்த ஆய்வு முடிவுகளை சந்திரயானின் ஆர்பிட்டர் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைக்கும்.
ரோவர் மண்ணை ஆய்வு செய்து கொடுக்கும் தகவல்களை கொண்டு நிலவில் உயிர்கள் ((ஏற்கனவே வாழ்ந்துள்ளனவா? தற்போது வாழ்கின்றனவா?)) எதிர்காலத்தில் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய முடியும். மேலும் நிலவில் உள்ள தனிமங்களின் தன்மைகளை தெரிந்து கொண்டு அவற்றை பூமிக்கு கொண்டு வந்து மனிதர்களின் தேவைக்கு பயன்படுத்த முடியுமா எனவும் சாத்தியக்கூறுகளை ஆராய இயலும்.
ரோவர் இந்த பணிகளை மேற்கொண்டுள்ள நிலையில் விக்ரம் லேண்டர் நிலவில் என்ன செய்யும்? எனும் கேள்வி எழும். ரோவரை போலவே லேண்டரும் நிலவில் ஆய்வுப்பணியில் ஈடுபடும். இதற்கு வசதியாக
விக்ரம் லேண்டரில் 4 கருவிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த கருவி மூலம் நிலவின் வெப்ப நிலை குறித்து தெளிவான தகவல்களை பெற முடியும். நிலவிலும் நில அதிர்வுகள் உள்ளனவா? இதற்கு முன்பு நில அதிர்வுகள் இருந்திருக்கிறதா? போன்ற தரவுகளை லேண்டர் சேகரித்து பூமிக்கு அனுப்பும்.
நிலவின் நில அதிர்வுகளை விஞ்ஞானிகள் தெரிந்து கொள்ள விரும்புவதன் நோக்கமே எதிர்காலத்தில் நிலவில் மனிதர்களை குடியமர்த்த முடியுமா என்பது தான். அத்தோடு எதிர்காலத்தில் நிலவில் மனிதர்களை தங்க வைத்து ஆய்வு செய்யவும் உலக நாடுகள் திட்டமிட்டு வருகின்றன. அப்படி எதிர்காலத்தில் மனிதர்கள் நிலவுக்கு செல்லும் பட்சத்தில் அவர்கள் அங்கு தங்குவதற்கு வசதியாக கட்டுமானங்களை அமைக்க இயலுமா? என்பதை தெரிந்து கொள்ளவே நிலவின் அதிர்வுகளை விக்ரம் லேண்டர் ஆராயும்.
லேண்டரில் உள்ள மற்றொரு கருவியான Laser Retroreflector Array எனப்படும் கருவி, பூமியிடம் இருந்து நிலா சிறிது சிறிதாக விலகி செல்வதாக கூறப்படுவது தொடர்பான தரவுகளை சேகரிக்கும். இப்படி லேண்டரும், ரோவரும் 14 நாட்கள் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு தகவல்களை நமக்கு அனுப்பிவிட்டு 15 வது நாள் முற்றிலுமாக செயல் இழந்து விடும்.
ஏனென்றால் பூமியை பொறுத்தவரை, ஒரு நாள் என்பது 12 மணி நேரம் பகல், 12 மணி நேரம் இரவு என்பதாகும். ஆனால், நிலவில் ஒரு நாள் என்பது பூமியின் 28 நாளை குறிக்கும். அதாவது, தொடர்ந்து 14 நாட்கள் பகல், அடுத்த 14 நாட்கள் இரவாக இருக்கும். பகல் நேரத்தில் மட்டுமே சூரிய ஒளி நிலவில் கிடைக்கும் என்பதால் அந்த 14 நாட்கள் மட்டுமே சோலார் பேனல் மூலமாக சக்தி பெற்று விக்ரம் லேண்டராலும், பிரக்யான் ரோவராலும் செயல்பட முடியும். பிறகு நிலவில் இரவு வந்ததும் மைனஸ் 120 டிகிரி செல்சியஸுக்கும் குறைவான குளிர் ஏற்பட்டு லேண்டரும், ரோவரும் உறைந்து போய்விடும். எனவே 14 நாட்களுக்கு பிறகு லேண்டரையும், ரோவரையும் பயன்படுத்துவது தற்போதைக்கு இயலாத காரணம். ஆனால் எதிர்காலத்தில் உறை குளிர்நிலையையும் சமாளித்து ஆய்வுகளை மேற்கொள்ளும் கருவிகளை நிலவுக்கு அனுப்பும் திட்டம் இஸ்ரோவிடம் உள்ளது.
" />
உலக வல்லரசுகள் அமெரிக்கா, சீனாவால் முடியாத நிலவின் தென்துருவத்தை தன்வசமாக்கியுள்ளது இந்தியா. ஆனால் நிலவில் எதற்காக லேண்டரையும், ரோவரையும் இந்தியா களம் இறக்கியுள்ளது. அதனால் என்ன பயன்?
நிலவின் தென்துருவத்தில் லேண்டர் விக்ரம் தரையிறங்கிய சில மணி நேரங்களுக்கு பிறகு அதில் இருந்த ஒரு பக்க கதவு போன்ற அமைப்பு திறந்தது. இதனை அடுத்து உள்ளே இருந்த பிரக்யான் ரோவர் வெளியே வந்து நிலவில் தடம் பதித்தது. தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகளின் கட்டளைகளை ஏற்று நிலவில் ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது பிரக்யான் ரோவர்.
ராக்கெட் மூலம் சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணுக்கு கொண்டு சென்றது, ராக்கெட்டில் இருந்து சந்திரயான் விண்கலம் பிரிந்தது, விண்கலத்தில் இருந்து லேண்டர் பிரிந்தது பிறகு லேண்டர் நிலவில் தரையிறங்கியது என அனைத்தும் திட்டமிட்டபடி நிகழ்ந்தது. இந்த அனைத்து நிகழ்வுகளின் உச்சமாக லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்தது கருதப்படுகிறது. ஏனென்றால் இந்த ரோவர் தான் நிலவை ஆராய உள்ளது.
பிரக்யான் ரோவர் கருவியில் LASER Induced Breakdown Spectroscope மற்றும் Alpha Particle X-Ray Spectrometer என இரண்டு கருவிகள் உள்ளன. நிலவின் தரைப்பகுதியை குடைந்து அங்கு இருந்து மண்ணை எடுத்து ஆய்வு செய்வது தான் ரோவருக்கு இஸ்ரோ கொடுத்துள்ள அசைன்மென்ட்.
பிரக்யான் ரோவர் மூலம் நிலவின் மண்ணில் இரும்பு, அலுமினியம், மெக்னீசியம், சிலிக்கான், டைட்டானியம் போன்ற தனிமங்கள் உள்ளனவா? நிலவின் மேற்பரப்பில் உள்ள வேதிப்பொருள்கள் என்ன தன்மையில் உள்ளன என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
நிலவின் மண்ணை ஆய்வு செய்வதன் மூலம் நிலவில் ஹைட்ரஜன், ஆக்சிஜன் போன்றவற்றின் இருப்பு குறித்து தெரிந்து கொள்ள இயலும். இந்த ஆய்வு முடிவுகளை சந்திரயானின் ஆர்பிட்டர் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைக்கும்.
ரோவர் மண்ணை ஆய்வு செய்து கொடுக்கும் தகவல்களை கொண்டு நிலவில் உயிர்கள் ((ஏற்கனவே வாழ்ந்துள்ளனவா? தற்போது வாழ்கின்றனவா?)) எதிர்காலத்தில் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய முடியும். மேலும் நிலவில் உள்ள தனிமங்களின் தன்மைகளை தெரிந்து கொண்டு அவற்றை பூமிக்கு கொண்டு வந்து மனிதர்களின் தேவைக்கு பயன்படுத்த முடியுமா எனவும் சாத்தியக்கூறுகளை ஆராய இயலும்.
ரோவர் இந்த பணிகளை மேற்கொண்டுள்ள நிலையில் விக்ரம் லேண்டர் நிலவில் என்ன செய்யும்? எனும் கேள்வி எழும். ரோவரை போலவே லேண்டரும் நிலவில் ஆய்வுப்பணியில் ஈடுபடும். இதற்கு வசதியாக
விக்ரம் லேண்டரில் 4 கருவிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த கருவி மூலம் நிலவின் வெப்ப நிலை குறித்து தெளிவான தகவல்களை பெற முடியும். நிலவிலும் நில அதிர்வுகள் உள்ளனவா? இதற்கு முன்பு நில அதிர்வுகள் இருந்திருக்கிறதா? போன்ற தரவுகளை லேண்டர் சேகரித்து பூமிக்கு அனுப்பும்.
நிலவின் நில அதிர்வுகளை விஞ்ஞானிகள் தெரிந்து கொள்ள விரும்புவதன் நோக்கமே எதிர்காலத்தில் நிலவில் மனிதர்களை குடியமர்த்த முடியுமா என்பது தான். அத்தோடு எதிர்காலத்தில் நிலவில் மனிதர்களை தங்க வைத்து ஆய்வு செய்யவும் உலக நாடுகள் திட்டமிட்டு வருகின்றன. அப்படி எதிர்காலத்தில் மனிதர்கள் நிலவுக்கு செல்லும் பட்சத்தில் அவர்கள் அங்கு தங்குவதற்கு வசதியாக கட்டுமானங்களை அமைக்க இயலுமா? என்பதை தெரிந்து கொள்ளவே நிலவின் அதிர்வுகளை விக்ரம் லேண்டர் ஆராயும்.
லேண்டரில் உள்ள மற்றொரு கருவியான Laser Retroreflector Array எனப்படும் கருவி, பூமியிடம் இருந்து நிலா சிறிது சிறிதாக விலகி செல்வதாக கூறப்படுவது தொடர்பான தரவுகளை சேகரிக்கும். இப்படி லேண்டரும், ரோவரும் 14 நாட்கள் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு தகவல்களை நமக்கு அனுப்பிவிட்டு 15 வது நாள் முற்றிலுமாக செயல் இழந்து விடும்.
ஏனென்றால் பூமியை பொறுத்தவரை, ஒரு நாள் என்பது 12 மணி நேரம் பகல், 12 மணி நேரம் இரவு என்பதாகும். ஆனால், நிலவில் ஒரு நாள் என்பது பூமியின் 28 நாளை குறிக்கும். அதாவது, தொடர்ந்து 14 நாட்கள் பகல், அடுத்த 14 நாட்கள் இரவாக இருக்கும். பகல் நேரத்தில் மட்டுமே சூரிய ஒளி நிலவில் கிடைக்கும் என்பதால் அந்த 14 நாட்கள் மட்டுமே சோலார் பேனல் மூலமாக சக்தி பெற்று விக்ரம் லேண்டராலும், பிரக்யான் ரோவராலும் செயல்பட முடியும். பிறகு நிலவில் இரவு வந்ததும் மைனஸ் 120 டிகிரி செல்சியஸுக்கும் குறைவான குளிர் ஏற்பட்டு லேண்டரும், ரோவரும் உறைந்து போய்விடும். எனவே 14 நாட்களுக்கு பிறகு லேண்டரையும், ரோவரையும் பயன்படுத்துவது தற்போதைக்கு இயலாத காரணம். ஆனால் எதிர்காலத்தில் உறை குளிர்நிலையையும் சமாளித்து ஆய்வுகளை மேற்கொள்ளும் கருவிகளை நிலவுக்கு அனுப்பும் திட்டம் இஸ்ரோவிடம் உள்ளது.
" />
உலக வல்லரசுகள் அமெரிக்கா, சீனாவால் முடியாத நிலவின் தென்துருவத்தை தன்வசமாக்கியுள்ளது இந்தியா. ஆனால் நிலவில் எதற்காக லேண்டரையும், ரோவரையும் இந்தியா களம் இறக்கியுள்ளது. அதனால் என்ன பயன்?
நிலவின் தென்துருவத்தில் லேண்டர் விக்ரம் தரையிறங்கிய சில மணி நேரங்களுக்கு பிறகு அதில் இருந்த ஒரு பக்க கதவு போன்ற அமைப்பு திறந்தது. இதனை அடுத்து உள்ளே இருந்த பிரக்யான் ரோவர் வெளியே வந்து நிலவில் தடம் பதித்தது. தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகளின் கட்டளைகளை ஏற்று நிலவில் ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது பிரக்யான் ரோவர்.
ராக்கெட் மூலம் சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணுக்கு கொண்டு சென்றது, ராக்கெட்டில் இருந்து சந்திரயான் விண்கலம் பிரிந்தது, விண்கலத்தில் இருந்து லேண்டர் பிரிந்தது பிறகு லேண்டர் நிலவில் தரையிறங்கியது என அனைத்தும் திட்டமிட்டபடி நிகழ்ந்தது. இந்த அனைத்து நிகழ்வுகளின் உச்சமாக லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்தது கருதப்படுகிறது. ஏனென்றால் இந்த ரோவர் தான் நிலவை ஆராய உள்ளது.
பிரக்யான் ரோவர் கருவியில் LASER Induced Breakdown Spectroscope மற்றும் Alpha Particle X-Ray Spectrometer என இரண்டு கருவிகள் உள்ளன. நிலவின் தரைப்பகுதியை குடைந்து அங்கு இருந்து மண்ணை எடுத்து ஆய்வு செய்வது தான் ரோவருக்கு இஸ்ரோ கொடுத்துள்ள அசைன்மென்ட்.
பிரக்யான் ரோவர் மூலம் நிலவின் மண்ணில் இரும்பு, அலுமினியம், மெக்னீசியம், சிலிக்கான், டைட்டானியம் போன்ற தனிமங்கள் உள்ளனவா? நிலவின் மேற்பரப்பில் உள்ள வேதிப்பொருள்கள் என்ன தன்மையில் உள்ளன என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
நிலவின் மண்ணை ஆய்வு செய்வதன் மூலம் நிலவில் ஹைட்ரஜன், ஆக்சிஜன் போன்றவற்றின் இருப்பு குறித்து தெரிந்து கொள்ள இயலும். இந்த ஆய்வு முடிவுகளை சந்திரயானின் ஆர்பிட்டர் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைக்கும்.
ரோவர் மண்ணை ஆய்வு செய்து கொடுக்கும் தகவல்களை கொண்டு நிலவில் உயிர்கள் ((ஏற்கனவே வாழ்ந்துள்ளனவா? தற்போது வாழ்கின்றனவா?)) எதிர்காலத்தில் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய முடியும். மேலும் நிலவில் உள்ள தனிமங்களின் தன்மைகளை தெரிந்து கொண்டு அவற்றை பூமிக்கு கொண்டு வந்து மனிதர்களின் தேவைக்கு பயன்படுத்த முடியுமா எனவும் சாத்தியக்கூறுகளை ஆராய இயலும்.
ரோவர் இந்த பணிகளை மேற்கொண்டுள்ள நிலையில் விக்ரம் லேண்டர் நிலவில் என்ன செய்யும்? எனும் கேள்வி எழும். ரோவரை போலவே லேண்டரும் நிலவில் ஆய்வுப்பணியில் ஈடுபடும். இதற்கு வசதியாக
விக்ரம் லேண்டரில் 4 கருவிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த கருவி மூலம் நிலவின் வெப்ப நிலை குறித்து தெளிவான தகவல்களை பெற முடியும். நிலவிலும் நில அதிர்வுகள் உள்ளனவா? இதற்கு முன்பு நில அதிர்வுகள் இருந்திருக்கிறதா? போன்ற தரவுகளை லேண்டர் சேகரித்து பூமிக்கு அனுப்பும்.
நிலவின் நில அதிர்வுகளை விஞ்ஞானிகள் தெரிந்து கொள்ள விரும்புவதன் நோக்கமே எதிர்காலத்தில் நிலவில் மனிதர்களை குடியமர்த்த முடியுமா என்பது தான். அத்தோடு எதிர்காலத்தில் நிலவில் மனிதர்களை தங்க வைத்து ஆய்வு செய்யவும் உலக நாடுகள் திட்டமிட்டு வருகின்றன. அப்படி எதிர்காலத்தில் மனிதர்கள் நிலவுக்கு செல்லும் பட்சத்தில் அவர்கள் அங்கு தங்குவதற்கு வசதியாக கட்டுமானங்களை அமைக்க இயலுமா? என்பதை தெரிந்து கொள்ளவே நிலவின் அதிர்வுகளை விக்ரம் லேண்டர் ஆராயும்.
லேண்டரில் உள்ள மற்றொரு கருவியான Laser Retroreflector Array எனப்படும் கருவி, பூமியிடம் இருந்து நிலா சிறிது சிறிதாக விலகி செல்வதாக கூறப்படுவது தொடர்பான தரவுகளை சேகரிக்கும். இப்படி லேண்டரும், ரோவரும் 14 நாட்கள் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு தகவல்களை நமக்கு அனுப்பிவிட்டு 15 வது நாள் முற்றிலுமாக செயல் இழந்து விடும்.
ஏனென்றால் பூமியை பொறுத்தவரை, ஒரு நாள் என்பது 12 மணி நேரம் பகல், 12 மணி நேரம் இரவு என்பதாகும். ஆனால், நிலவில் ஒரு நாள் என்பது பூமியின் 28 நாளை குறிக்கும். அதாவது, தொடர்ந்து 14 நாட்கள் பகல், அடுத்த 14 நாட்கள் இரவாக இருக்கும். பகல் நேரத்தில் மட்டுமே சூரிய ஒளி நிலவில் கிடைக்கும் என்பதால் அந்த 14 நாட்கள் மட்டுமே சோலார் பேனல் மூலமாக சக்தி பெற்று விக்ரம் லேண்டராலும், பிரக்யான் ரோவராலும் செயல்பட முடியும். பிறகு நிலவில் இரவு வந்ததும் மைனஸ் 120 டிகிரி செல்சியஸுக்கும் குறைவான குளிர் ஏற்பட்டு லேண்டரும், ரோவரும் உறைந்து போய்விடும். எனவே 14 நாட்களுக்கு பிறகு லேண்டரையும், ரோவரையும் பயன்படுத்துவது தற்போதைக்கு இயலாத காரணம். ஆனால் எதிர்காலத்தில் உறை குளிர்நிலையையும் சமாளித்து ஆய்வுகளை மேற்கொள்ளும் கருவிகளை நிலவுக்கு அனுப்பும் திட்டம் இஸ்ரோவிடம் உள்ளது.
">
News Tamil 24 X 7 : நிலவின் தென்துருவத்தை தன்வசமாக்கிய இந்தியா..! லேண்டர், ரோவரால் என்ன பயன்? | lander rover
உலக வல்லரசுகள் அமெரிக்கா, சீனாவால் முடியாத நிலவின் தென்துருவத்தை தன்வசமாக்கியுள்ளது இந்தியா. ஆனால் நிலவில் எதற்காக லேண்டரையும், ரோவரையும் இந்தியா களம் இறக்கியுள்ளது. அதனால் என்ன பயன்?
நிலவின் தென்துருவத்தில் லேண்டர் விக்ரம் தரையிறங்கிய சில மணி நேரங்களுக்கு பிறகு அதில் இருந்த ஒரு பக்க கதவு போன்ற அமைப்பு திறந்தது. இதனை அடுத்து உள்ளே இருந்த பிரக்யான் ரோவர் வெளியே வந்து நிலவில் தடம் பதித்தது. தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகளின் கட்டளைகளை ஏற்று நிலவில் ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது பிரக்யான் ரோவர்.
ராக்கெட் மூலம் சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணுக்கு கொண்டு சென்றது, ராக்கெட்டில் இருந்து சந்திரயான் விண்கலம் பிரிந்தது, விண்கலத்தில் இருந்து லேண்டர் பிரிந்தது பிறகு லேண்டர் நிலவில் தரையிறங்கியது என அனைத்தும் திட்டமிட்டபடி நிகழ்ந்தது. இந்த அனைத்து நிகழ்வுகளின் உச்சமாக லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்தது கருதப்படுகிறது. ஏனென்றால் இந்த ரோவர் தான் நிலவை ஆராய உள்ளது.
பிரக்யான் ரோவர் கருவியில் LASER Induced Breakdown Spectroscope மற்றும் Alpha Particle X-Ray Spectrometer என இரண்டு கருவிகள் உள்ளன. நிலவின் தரைப்பகுதியை குடைந்து அங்கு இருந்து மண்ணை எடுத்து ஆய்வு செய்வது தான் ரோவருக்கு இஸ்ரோ கொடுத்துள்ள அசைன்மென்ட்.
பிரக்யான் ரோவர் மூலம் நிலவின் மண்ணில் இரும்பு, அலுமினியம், மெக்னீசியம், சிலிக்கான், டைட்டானியம் போன்ற தனிமங்கள் உள்ளனவா? நிலவின் மேற்பரப்பில் உள்ள வேதிப்பொருள்கள் என்ன தன்மையில் உள்ளன என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
நிலவின் மண்ணை ஆய்வு செய்வதன் மூலம் நிலவில் ஹைட்ரஜன், ஆக்சிஜன் போன்றவற்றின் இருப்பு குறித்து தெரிந்து கொள்ள இயலும். இந்த ஆய்வு முடிவுகளை சந்திரயானின் ஆர்பிட்டர் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைக்கும்.
ரோவர் மண்ணை ஆய்வு செய்து கொடுக்கும் தகவல்களை கொண்டு நிலவில் உயிர்கள் ((ஏற்கனவே வாழ்ந்துள்ளனவா? தற்போது வாழ்கின்றனவா?)) எதிர்காலத்தில் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய முடியும். மேலும் நிலவில் உள்ள தனிமங்களின் தன்மைகளை தெரிந்து கொண்டு அவற்றை பூமிக்கு கொண்டு வந்து மனிதர்களின் தேவைக்கு பயன்படுத்த முடியுமா எனவும் சாத்தியக்கூறுகளை ஆராய இயலும்.
ரோவர் இந்த பணிகளை மேற்கொண்டுள்ள நிலையில் விக்ரம் லேண்டர் நிலவில் என்ன செய்யும்? எனும் கேள்வி எழும். ரோவரை போலவே லேண்டரும் நிலவில் ஆய்வுப்பணியில் ஈடுபடும். இதற்கு வசதியாக
விக்ரம் லேண்டரில் 4 கருவிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த கருவி மூலம் நிலவின் வெப்ப நிலை குறித்து தெளிவான தகவல்களை பெற முடியும். நிலவிலும் நில அதிர்வுகள் உள்ளனவா? இதற்கு முன்பு நில அதிர்வுகள் இருந்திருக்கிறதா? போன்ற தரவுகளை லேண்டர் சேகரித்து பூமிக்கு அனுப்பும்.
நிலவின் நில அதிர்வுகளை விஞ்ஞானிகள் தெரிந்து கொள்ள விரும்புவதன் நோக்கமே எதிர்காலத்தில் நிலவில் மனிதர்களை குடியமர்த்த முடியுமா என்பது தான். அத்தோடு எதிர்காலத்தில் நிலவில் மனிதர்களை தங்க வைத்து ஆய்வு செய்யவும் உலக நாடுகள் திட்டமிட்டு வருகின்றன. அப்படி எதிர்காலத்தில் மனிதர்கள் நிலவுக்கு செல்லும் பட்சத்தில் அவர்கள் அங்கு தங்குவதற்கு வசதியாக கட்டுமானங்களை அமைக்க இயலுமா? என்பதை தெரிந்து கொள்ளவே நிலவின் அதிர்வுகளை விக்ரம் லேண்டர் ஆராயும்.
லேண்டரில் உள்ள மற்றொரு கருவியான Laser Retroreflector Array எனப்படும் கருவி, பூமியிடம் இருந்து நிலா சிறிது சிறிதாக விலகி செல்வதாக கூறப்படுவது தொடர்பான தரவுகளை சேகரிக்கும். இப்படி லேண்டரும், ரோவரும் 14 நாட்கள் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு தகவல்களை நமக்கு அனுப்பிவிட்டு 15 வது நாள் முற்றிலுமாக செயல் இழந்து விடும்.
ஏனென்றால் பூமியை பொறுத்தவரை, ஒரு நாள் என்பது 12 மணி நேரம் பகல், 12 மணி நேரம் இரவு என்பதாகும். ஆனால், நிலவில் ஒரு நாள் என்பது பூமியின் 28 நாளை குறிக்கும். அதாவது, தொடர்ந்து 14 நாட்கள் பகல், அடுத்த 14 நாட்கள் இரவாக இருக்கும். பகல் நேரத்தில் மட்டுமே சூரிய ஒளி நிலவில் கிடைக்கும் என்பதால் அந்த 14 நாட்கள் மட்டுமே சோலார் பேனல் மூலமாக சக்தி பெற்று விக்ரம் லேண்டராலும், பிரக்யான் ரோவராலும் செயல்பட முடியும். பிறகு நிலவில் இரவு வந்ததும் மைனஸ் 120 டிகிரி செல்சியஸுக்கும் குறைவான குளிர் ஏற்பட்டு லேண்டரும், ரோவரும் உறைந்து போய்விடும். எனவே 14 நாட்களுக்கு பிறகு லேண்டரையும், ரோவரையும் பயன்படுத்துவது தற்போதைக்கு இயலாத காரணம். ஆனால் எதிர்காலத்தில் உறை குளிர்நிலையையும் சமாளித்து ஆய்வுகளை மேற்கொள்ளும் கருவிகளை நிலவுக்கு அனுப்பும் திட்டம் இஸ்ரோவிடம் உள்ளது.
00 Comments
Leave a comment