வர்த்தக வங்கிகள் மற்றும் பெரு நிறுவனங்களின் கடன் தொகை 2014 முதல் 2023 வரை 14.5 லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் பதிலளித்துள்ளார். கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் தொகை 2014 முதல் எவ்வளவு தொகை தள்ளுபடி செய்யப்பட்டது என்றும், மீட்கப்பட்ட தொகை எவ்வளவு என்பதை தெரிவிக்கவேண்டும் என்று மத்திய நிதி அமைச்சரிடம் கனிமொழி எம்பி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்துள்ள மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் காரத் ரிசர்வ் வங்கி கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவரங்கள் தங்களால் பராமரிக்கப்படுவதில்லை என்று தெரிவித்தார்.மேலும், SCB எனப்படும் பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கிகள் 2014 முதல் 2023 வரை 2 லட்சத்து 4 ஆயிரத்து 668 கோடி ரூபாய் தள்ளுபடியான கடன்தொகை மீட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இந்தியா
00 Comments
Leave a comment