இந்தியா

மிகப்பெரிய ப்ராஜெக்ட்டை கைப்பற்றிய அதானி..5 ஆயிரம் கோடியாம்..

ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதிகளில் ஒன்றான மும்பையில் உள்ள தாராவியின் மறுவடிவமைப்பிற்கான திட்டத்தை அதானி குழுமத்திடம் வழங்குவதாக மகாராஷ்டிரா அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பல ஆண்டுகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள இந்த திட்டத்தை தற்போது அதானி குழுமத்திற்கு வழங்குவதற்கான தீர்மானத்தை மாநில அரசு வெளியிட்டுள்ளதாக தாராவி மறுவாழ்வுத் திட்டத்தின் தலைமை நிர்வாகி எஸ்.வி.ஆர். ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார். சுமார் 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் எதிர்பார்க்கப்படும் இந்தத் திட்டத்தை, அதானி குழுமம் 5,069 கோடியை மேற்கோள் காட்டி பெற்றுள்ளது. மேலும் மும்பையின் பிரதான பகுதியில் சுமார் 240 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்த குடிசை பகுதிகளை கொண்டுள்ள தாராவி, சுமார் 8 லட்சம் மக்கள் தொகையை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

00 Comments

Leave a comment