கடந்த நிதியாண்டில், இந்திய அரசுத்துறைவங்கிகள் இரண்டு புள்ளி பூஜ்யம் ஒன்பது லட்சம் கோடி ரூபாய்க்கான வாராக்கடன்களை தள்ளுபடி செய்தன.இதையும் சேர்த்து கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 10 புள்ளி 57 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வாராக்கடன் அரசுத்துறை வங்கிகளால் தள்ளுடி செய்யப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி இந்த தகவலை தெரிவித்துள்ளது. 2021-22 நிதியாண்டில் தள்ளுபடி செய்யப்பட்ட வாராக்கடன்களை விடவும், கடந்த நிதியாண்டில் அதிக அளவுக்கு வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா
00 Comments
Leave a comment