இந்தியா

இந்தியா 5 டிரில்லியன் பொருளாதாரமாக உருவெடுக்கும்.. உலக வளர்ச்சிக்கான இன்ஜினாக இந்தியா விளங்கும் | Modi

இந்தியா விரைவில் 5 டிரில்லியன் பொருளாதாரமாக உருவெடுத்து உலகின் வளர்ச்சி எந்திரமாக மாறும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். தென்ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க்கில் பிரிக்ஸ் வர்த்தக கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, கொரோனா கால நெருக்கடியை வளர்ச்சிக்கான வாய்ப்பாக இந்தியா பயன்படுத்திக் கொண்டதாகவும், சீரமைப்பு நடவடிக்கைகள் மூலம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் உலக வளர்ச்சிக்கான இன்ஜினாக இந்தியா விளங்கும் என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
 

00 Comments

Leave a comment