Also Watch
Read this
By: Manigandan Raja

சென்னையில் சொத்துவரி மதிப்பு பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறி பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.சொத்துவரி உயர்த்தப்படவில்லை என சென்னை மாநகராட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள நிலையில், அதனை டேக் செய்து பலரும் எதிர்ப்பு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டும் சென்னைவாசிகள், தங்களுக்கு ஏற்பட்டுள்ள கூடுதல் வரிச்சுமை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், “முழு சென்னையையும் முழுங்கிவிட்டீர்கள்… மனசாட்சி இல்லையா?” என கடுமையாக விமர்சித்துள்ள சிலர், சென்னை மாநகராட்சி ஆணையர் பதவி விலக வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மாநகராட்சி தரப்பில் வரி உயர்வு இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் கூறும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved