Also Watch
Read this
By: Manigandan Raja

அன்னாச்சலம் என்பவருக்கு சொந்தமான டீக்கடையில் வழக்கம்போல் வியாபாரம் நடந்துகொண்டிருந்த போது, பயன்படுத்தப்பட்டு வந்த சமையல் சிலிண்டர் திடீரென வெடித்ததாக கூறப்படுகிறது.
வெடிப்பின் தாக்கத்தில் சுமார்15 அடி உயரம் வரை தீப்பிழம்பு சாலையை நோக்கி பரவியது. அப்போது கடையில் இருந்தவர்கள், டீ அருந்திக்கொண்டிருந்தவர்கள், மேலும் சாலையில் நடந்துசென்றவர்கள் என மொத்தம் 12 பேர் தீக்காயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் தீயை கட்டுப்படுத்தி காயமடைந்தவர்களை மீட்டனர். அனைவரும் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர். சம்பவம் குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தீ விபத்திற்கான துல்லியமான காரணம் இன்னும் தெரியவரவில்லை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved