திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா பக்தி இன்னிசை கச்சேரிக்கு வந்த சிறுமி தியாவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாசி திருவிழா கோலாகலம்அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறக்கூடிய முக்கிய திருவிழாக்களில் ஒன்றானது மாசி திருவிழா. இந்த ஆண்டு மாசி திருவிழா 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பக்தி இன்னிசை கச்சேரிக்கு வந்த சிறுமி தியாஇன்று மாசி திருவிழா நான்காவது நாளில் கோவில் கலையரங்கத்தில் நடக்கும் பக்தி இன்னிசை நிகழ்ச்சியில் சிறுமி தியா கலந்து கொண்டு பக்தி பாடல்களைப் பாட உள்ளார். கோயில் பிரசாதம் கொடுத்து உற்சாக வரவேற்புஇதற்காக வந்த தியாவிற்கு மாலை அணிவித்து கோயில் பிரசாதம் கொடுத்து உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறுமி தியா பக்தி பாடல்களை பாடி அசத்தினார். இதனை பார்த்த பக்தர்கள் மெய்சிலிர்த்தனர். மேலும் பக்தர்கள் ஆர்வத்துடன் செல்பி எடுத்துக் கொண்டனர். Related Link தழவகொழுந்தீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம்