கோவை மருதமலையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய முருகன் சிலை அமைய உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 160 அடி உயரத்துக்கு கல்லால் ஆன முருகன் சிலை அமைக்கப்படவுள்ளதாகவும், விரைவில் வல்லுநர் குழு ஆய்வு செய்யவுள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.