Also Watch
Read this
By: Fyrose Banu

சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்லூரியில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு மாணவிகள் ONAM என்ற ஆங்கில எழுத்து வடிவில் நின்றும், கேரளா செண்டை மேளம் முழங்க நடனமாடியும் அசத்தினர்.


ஓணம் பண்டிகையை கொண்டாடும் வகையில் சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள விவேகானந்தா மகளிர் கல்லூரியில் மாணவிகள் ONAM என்ற ஆங்கில எழுத்து வடிவில் நின்றும் அலங்காரம் செய்யப்பட்ட யானையிடம் ஆசிர்வாதம் பெற்றும் கேரள செண்டை மேளத்திற்கு ஏற்ப நடனமாடியும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


அப்போது கல்லூரி பேராசிரியர்கள் ஆயிரக்கணக்கான மாணவிகள் கல்லூரி அரங்கில் ஒரே நேரத்தில் ஓணம் பண்டிகையை கொண்டாடும் விதத்தில் நடனமாடி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இந்நிகழ்வு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved