Also Watch
Read this
Posted on: Apr 19, 2025 01:54 AM
By: Srini Vasan

திருச்சி மாவட்டம் முசிறி அருகே பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கூலித் தொழிலாளிகள் இருவர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
முசிறி அருகே அரசு பள்ளியில் 9 மற்றும் 7ஆம் வகுப்பு படிக்கும் அக்கா-தங்கை மயங்கிய நிலையில், அவர்களை மீட்டு ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிகளை மருத்துவர்கள் சோதனை செய்ததில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து முசிறி அனைத்து மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில் வெல்டிங் பட்டறையில் வேலை பார்க்கும் அஜித் மற்றும் கொத்தனார் வேலை பார்க்கும் கேசவன் ஆகியோர், சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved